பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



[கிரேக்க மன்னன் ஒருவனுக்கும் ஒரு வேதாந்திக்கும் நடக்கும் உரையாடல்]

'மன்னன்-எகிப்து நாட்டை எதிர்த்துநான்

இன்றே செல்வேன் படையுடன். மகிமை பெருக வெல்லுவேன்.
மகிழ்ச்சி பொங்கத் திரும்புவேன்.

வேதாந்தி-அப்புறம்...? மன்னன் -பார சீக நாட்டிலே

படை யெடுத்துச் செல்லுவேன். வீரப் போரை நடத்துவேன்.
வெற்றிக் கொடியை நாட்டுவேன் !

வேதாந்தி-ம்...அப்புறம்...?
மன்னன் -பாரசீக நாட்டினைப்

படை யெடுத்து வென்றபின் சீர்மி கும்நல் இந்தியா
தேசம் அதையும் வெல்லுவேன்.
வேதாந்தி-அதற்குப் பிறகு...?

61?-3

37