பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளே இருந்த அவன்படத்தை
 உடனே நன்றாய்க் கிழித்தெறிந்தேன்.

அதற்குப் பதிலாய் என்படத்தை
அழகாய் ஒட்டி வைத்துள்ளேன்.

இங்கே பாராய்!”என்றவனும்
எடுத்துக் காட்டினன் ஒருபடத்தை.

கேட்டனர் சீமான் அவ்வுரையை,
'கிர்ர்'ரெனத் தலையும் சுற்றியதே!

"அந்தோ,இதுபோல் என்படங்கள்
 அனைத்தும் நாசம் ஆயினவோ!

எத்தனை ஆயிரம் செலவழித்தேன்!
எல்லாம் வீண்வீண்!"என்றனரே.

42