பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறிய வீடு


அறிஞர் ஒருவர் வீட்டைக் கட்டி
          அடக்கமாக வாழ்ந்தனர்.
'சிறிய வீடு' என்றே அதனைத்
    தெருவில் சென்றோர் கூறினர்.

அந்த அறிஞர் தம்மைத் தேடி
    அன்று ஒருவர் வந்தனர்.
வந்த மனிதர், இந்த வீடும்
    வாழ்வ தற்கே ஏற்றதோ ?

முகப்பு சிறிதும் அழகா யில்லை.
    முற்றம் குறுகி யுள்ளது.
சிகப்பு வர்ணம் அடித்திருந்தால்
    சிறப்பே என்றார். அத்துடன்,

'நண்பர் பலரும் கூடி வந்தால்
    நன்க மர்ந்து பேசவே,
சின்னஞ் சிறிய இந்த அறையில்
    சிறிதும் வசதி யில்லையே!”


45