பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-2.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்னை ஏனோ அழகாக
ஈசன் படைக்க வில்லையென
எண்ணி, எண்ணி ஒருகாக்கை
ஏங்கிச் சுற்றித் திரிகையிலே,


கூட்டில் அழகிய கிளியொன்றைப்
போட்டு அடைத்து, ஒருபையன்
வாட்டி வதைக்கக் கண்டதுவே;
மனத்தில் வருத்தம் கொண்டதுவே.


'அழகாய் என்னைப் படைத்திருந்தால்,
அடியே னுக்கும் இக்கதிதான்,
அழகைக் காட்டிலும் விடுதலையை
அளித்தார் ஆண்டவன்' என்றதுவே!

612-1

5