பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசை அமைச்சைப் படைத்தோர்கள்;
அடங்கார் மண்டை உடைத்தோர்கள்;
முரசு மூன்றும் உடையோர்கள்;
மூர்க்கப் புலியின் நடையோர்கள்!

கோட்டை கொத்தளம் அமைத்தோர்கள்;
குளிர்பூஞ் சோலை அமைத்தோர்கள்;
நாட்டுக் குயிரைக் கொடுத்தோர்கள்;
நல்லார் இணக்கம் அடுத்தோர்கள்!

மானம் உயிராய் மதித்தோர்கள்;
வாழும் வகையை விதித்தோர்கள்;
ஈனம் கண்டு கொதித்தோர்கள்;
எதிர்த்த பகையை மிதித்தோர்கள்!

காதல் வீரம் வளர்த்தோர்கள்;
காவியம் அளவிலா தளித்தோர்கள்;
சாதல் வரினும் தன்மானத்
தகைமை பேணிக் களித்தோர்கள்!



94 கவிஞர் வாணிதாசன்