பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வழியிற் பெரியோரைக் கண்டால்-நல்
'வணக்கம்' எனச்சொல்லு! ஒரமாய்ச் செல்லு!
இழிந்தவர் கல்லாத மக்கள்!-என்ன
இருந்தாலும் கல்லாதார் வயல்வெளிப் புற்கள்! 4

வேளை கடந்து செல்லாதே!-பள்ளி
வெளியினில் அங்கிங்கு மாக நில்லாதே!
நாளைக் கடத்திடப் போமோ?-சென்ற
நாளும் திரும்பி வருதலும் ஆமோ? 5

தப்பாமல் கல்வியை ஓது!-கல்வி
தரும்புகழ்க் கீடிந்த உலகினில் ஏது?
மப்பில்லா வானம்போல் ஆகும்!-கல்வி
வளமில்லா வாழ்க்கையில் பயனற்றுப் போகும்! 6

கற்பிப்போர் கண்கொடுப் போரே!-அந்தக்
கணக்காயர் உரையினில் இருசெவி சேரே!
நற்பெயர் எடுத்திட வேண்டும்!-நாளும்
நன்றாகப் படித்துநீ முன்னேற வேண்டும்! 7

அன்போடு கணக்காயர் போற்று!-பள்ளி
அறிவுரை வாழ்க்கையின் இருளுக்கு மாற்று!
என்றென்றும் கற்றிட லாகும்!-அறிவு
இல்லாமை என்கின்ற சொல்லற்றுப் போகும்! 8


98 கவிஞர் வாணிதாசன்