பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விளைந்த தோப்புக்குக் காவல் போல
வெள்ள ஆற்றுக்குக் கரையைப் போல
வளர்ந்த கொடிக்குக் கொம்பைப் போல
மங்கை எழிற்கு விழியைப் போல- 4

உண்ணும் உணவுக்(கு) உப்பைப் போல
ஊரின் இருளுக்(கு) ஒளியைப் போல
பண்ணுக் கியைந்த பாடல் போலப்
படிப்புக் கேற்ற ஒழுக்கம் போல- 5

உடலை மறைக்கும் ஆடை போல
உழைப்புக் கேற்ற விளைவு போலக்
கடலை நோக்கும் விளக்கைப் போலக்
கண்ணைக் காக்கும் இமையைப் போல- 6

வறுமை மாற்றப் புரட்சி போல
வாழ்வுக் கேற்ற வளப்பம் போலப்
பொறுமைக் கேற்ற புகழைப் போலப்
புலிக்கு வாய்த்த வலியைப் போல - 7

காலை தோன்றும் கதிரைப் போலக்
கடலில் தோன்றும் முத்தைப் போல
மாலை தோன்றும் மதியம் போல
வாழ்க்கைக் கேற்ற நெறியைப் போல- 8

ஊருக் கேற்ற ஆறு போல
உடலுக் கேற்ற உணவு போல
ஏரிக் கேற்ற மதகு போல
இளமைக் கேற்ற வளமை போல- 9


குழந்தை இக்கியம் ♦ 111