பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
53

காலை மாலை உடற்பயிற்சி
கடுநோய் போக்கும் நல்முயற்சி!
காலை மாலை உடற்பயிற்சி!
கைகால் உடலுயிர் நல்வளர்ச்சி! 1

குந்தி எழுந்தாற் கால்கையும்,
குடரும், இடையும் வலிவெய்தும்!
பந்தை அடித்தால் துடைமார்பும்
பாறை போல் விரிவடையும்! 2

நிலவில் 'பாரி' அடிப்பதுவும்,
நீரில் 'ஓரி' அடிப்பதுவும்,
அலைகடல் மூழ்கிக் குளிப்பதுவும்
அறிவுடற் காக்கம் அளிப்பனவாம்! 3

கைகால் சோர ஆடுவதும்,
கடற்கரை மணலில் ஒடுவதும்,
மெய்யை வளைத்துப் பின்நிமிர்ந்தே
விறைத்து நடப்பதும் நன்மருந்தே!4

சிலம்பக் கூடம் உண்டாக்கி
முன்னாள் செய்தார் உடற்பயிற்சி!
நலங்கொள் உடலே பெருஞ்செல்வம்!
நாளும் செய்வாய் உடற்பயிற்சி! 5


குழந்தை இலக்கியம் ♦ 113