பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
59

பொய்யும் சொல்லக் கூடாது!-தம்பி!
பொய்யும் சொல்லக் கூடாது!
மெய்யும் சொல்லக் கூடாது!-தம்பி!
மெய்யும் சொல்லக் கூடாது! 1

பொய்யும் மெய்யும் நன்மை தீமை
பொறுத்துக் கூற வேண்டும்!
வையம் சிறக்கும் வழியி துதான்!
மனத்தில் நிறுத்த வேண்டும்! 2

உயிரைக் காக்க அறிந்தும் பொய்யை
உரைத்தால் என்ன தப்பு?
உயர்வி ழந்தோம் என்று மெய்யை
உதறு வதோ செப்பு? 3

மெய்யும் பொய்யும் நெருப்புச் சட்டி!
விழிப்பு மிகவே வேண்டும்!
மெய்யும் பொய்யும் இல்லா விட்டால்
வெற்றி யேது யாண்டும்? 4


126 ♦ கவிஞர் வாணிதாசன்