பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாலத் தேறி நின்றொருநாள்
பார்த்தது பிள்ளை வாய்க்காலை!
கோல வானைத் தன்காலைக்
குளிர்நீர் வாய்க்கால் கண்டதுவே!

4

தாய்சொல் தட்டி மற்றொருநாள்
தாவி ஏறிப் பாலத்தில்
வாயில், மோதிக் கீழ்நோக்கி
வாய்க்கால் இடையில் வீழ்ந்ததுவே!

5

‘அன்னை சொல்லைக் கேள்’ என்றும்!
அதிலே நன்மை உண்டென்றும்!
அன்னை சொல்லே பொன்சொல்லாம்!
அமிழ்தம் அமிழ்தம் தேன்சொல்லாம்!

6



குழந்தை இலக்கியம் ♦ 135