பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



63

காலும் கையும் சுருங்கிக்
கண்ணின் ஒளியும் ஒடுங்கித்
தோலும் நரம்பு மாகத்
தோன்றி வாழ்ந்தாள் கிழவி!

1

கிழவிப் பிள்ளை அழகன்
திருமண மான குமரன்!
பழகும் மனைவி பேச்சால்
தாயைப் பழித்து வந்தான்!

2

வீட்டை விட்டுத் தள்ளி,
வெறுத்துப் பேசி எள்ளி
மாட்டுக் கொட்டில் விட்டான்;
மல்லையில் - சோறும் இட்டான்!

3

வழக்கம் போல ஒருநாள்
மல்லை கொட்டில் இல்லை!
அழகன் மல்லை தேடி
அலைந்தான் அங்கிங்(கு) ஓடி!

4


136 ♦ கவிஞர் வாணிதாசன்