பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

‘நாங்கள் உணவைச் சேர்க்கின்றோம்!
நாளைக் குணவை யார்கொடுப்பார்?
போங்கள்! போங்கள்! உம்போலப்
பொழுதைப் போக்கின் என்உண்டாம்?

4

‘வெறுநாள் போக்கல் அறிவின்மை!
வேலையை முடித்த லேநன்மை!
வெறுநாள் போக்கோம்’ எனக்கூறி
விரைந்தன எறும்புகள் மரமேறி!

5

வெட்கம் அடைந்தனர் மூவருமே!
‘வீண்நாள் போக்கோம்!’ எனக்கூறிப்
பக்கம் இருக்கும் பள்ளிக்கே
பறந்தனர்! அறிவும் நிறைந்தனரே!

6



குழந்தை இலக்கியம் ♦ 143