பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பீங்கானில் முட்டை போல் ஒன்று – பொன்னி
பிற்பகல் வாங்கினாள். கடையினில் சென்று!
வாங்கிய முட்டையைப் பொன்னி – கூண்டில்
வைத்தாளே கோழியும் வந்திட எண்ணி!

4

முட்டைஎன் றெண்ணியே நாயும் – அதை
முன்போலத் திருடி வாய்கௌவிப் போயும்
குட்டையின் ஓரத்தில் குந்தி – வாலைக்
குழைத்துக் கடிக்க உடைந்தது பல்லும்!

5

திருட்டுத் தொழில் என்றும் வேண்டாம்!– பிறர்
பொருளினைத் திருடினால் இழிவென்றும் உண்டாம்!
திருட்டுத் தொழில்கெட்ட தாமே!– சிறு
திருட்டிலும் கால்கைபல் உடைபட்டுப் போமே!

6


குழந்தை இலக்கியம் ♦ 145