பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
75

ணக்கம் வணக்கம வகைகம் தாயே!
மலர்த்தேன் தமிழே! மருந்தே! வாழ்வே!
வணக்கம் வணக்கம் வணக்கம் தாயே! 1

குணகடல் வேங்கடம் குமரி மேற்கடல்
குரல்ஒலி தந்த உயிரே! தமிழே!
வணக்கம் வணக்கம் வணக்கம் தாயே!

அன்னை அறையை அகற்றி வந்தே
‘அம்மா’ என்றது. தீந்தமிழ் மொழியாம்!
உன்னை வணங்குவன் வணங்குவன் தாயே! 2

பின்னர்த் ‘தாத்தா,’ ‘அத்தை’ என்றே
பிதற்றிய சொல்லும் தீந்தமிழ் நன்றே
உன்னை வணங்குவன் வணங்குவன் தாயே!

கையினை ஊன்றிக் காலிரண் முழுத்து
மைவிழி நீர்முகம் செவ்விதழ் கறுக்க
‘ஐயா’, ‘அம்மா’ என்றது தமிழாம்! 3

பொய்புனை மாற்றார் இன்றுள் புலவர்
உய்யும் வழிசெய் ஒண்டமிழ்த் தாயே!
கையைக் கூப்பி வணங்குவன் வணங்குவன்!


162 ♦ கவிஞர் வாணிதாசன்