உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

இந்த பக்கமானது இருமுறையுள்ளதால்,
இதனை மெய்ப்புச்செய்ய வேண்டாமென
கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

(இருப்பினும், ஒரு முறை சரிபார்த்து, உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்)
காண்க:
பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/27

7

நிலவே! நிலவே! வாராயோ?
நீ பகல் எங்குச் சென்றாயோ?

உலகிற் கல்லார் உன்னிடத்தில்
ஒளவைக் கிழவி உண்டென்பார்;
நிலவே! அந்தக் கிழவிக்கு
நீரும் சோறும் கொடுப்பதியார்?- நிலவே!

அரிவாள் போல வான்தோன்றி
அழகாய் நாளும் வளர்கின்றாய்!
பெரிய வெள்ளித் தட்டாகிப்
பின்ஏன் குறைந்து தேய்கின்றாய்?- நிலவே!

தம்பி, தங்கை உனக்குண்டோ?
சாதி, சமயம் உனக்குண்டோ?
வம்பு வேண்டாம் என் தம்பி!
வாட்டம் தீர்க்க வருவாயே!- நிலவே!


14 ♦ கவிஞர் வாணிதாசன்