பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காடு கரம்பு துளிர்த்திடவும்,
காளை மாடு கொழுத்திடவும்,
ஓடை ஆறு கல்லிடுக்கில்
ஓயா திசையை மீட்டிடவும்- மழையே!

தவளை எல்லாம் ஓயாது
தத்திக் கத்திக் களித்திடவும்,
குவளை பூக்க வண்டினங்கள்
தேனைக் குடித்துப் பாடிடவும்- மழையே!


16 ♦ கவிஞர் வாணிதாசன்