பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
25

குட்டி போட்டது பூனை!
உடைந்தது சட்டி பானை!
எட்டி எழுந்தால் நீரும்
இல்லை இலையிற் சோறும்!1

தட்டில் வாயை வைக்கும்!
தடியை எடுத்தால் சீறும்!
கட்டி வெண்ணெய் மோரும்
கண்டால் வந்து சேரும்!2

‘மீ! ‘மீ! என்றே நக்கும்!
விரலை வாயால் சப்பும்!
‘சீச்சீ’ என்றால் சீறித்
திண்ணை வந்து கற்றும்!3

பாலைக் கண்டாற் கூவும்!
படுக்கப் பக்கம் மேவும்!
காலைக் கண்டால் வந்தே
காலு ராய்ந்து சுற்றும்!4


குழந்தை இலக்கியம் ♦ 51