பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

'ழலையர் அறிவு வளர மொழி வளரும்; நலம் வளரும்; நாடு வளரும்; நல்லரசு நிலவும்!' - இது கவிஞர் வாணிதாசருடைய எண்ணம்.

இவ்வெண்ண அடிப்படையில் அவர்கள் அவ்வப்போது சில பாடல்களை எழுதியிருந்தார்கள். அவற்றைத் திரட்டி ஒரு நூலாக வெளியிட்டால் தமிழ்க் குழந்தைகளுக்குப் பெரிதும் பயன்படும் என்று கருதினேன். என் கருத்து ஈடேற அவரும், அவர்தம் நண்பர்களாகிய திருவாளர்கள் புலவர் தில்லை தா. அழகுவேலனார், வித்துவான் புதுவை பா. முத்து, நா. அறிவழகன் ஆகியோரும் பெரிதும் உதவினார்கள். மிகுந்த பொருட் செலவையும் பாராது இதனை உருவாக்கிக் குழந்தையர் உலகுக்கு அளித்துள்ளேன். அவர்கள் பெறும் இன்பமே என் இன்பமும்!

இந் நூலை வெளியிட்டுக் கொள்ள இசைவளித்த கவிஞர் வாணிதாசர்க்கும், கருத்துரை நல்கிய தமிழ்க் காவலர் டாக்டர் அ. சிதம்பரநாதர் அவர்கட்கும், ஓவியங்கள் வரைந்து உதவிய சாகர், சரவணன் ஆகியோர்க்கும், இவ்விரண்டாம் பதிப்பில் மேலட்டை ஓவியம் வரைந்து தந்த மணியம் செல்வன் அவர்களுக்கும் நன்றி!

ந. பழநியப்பன்

உரிமையாளர்

வள்ளுவர் பண்ணை