பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காலை மாலை கறக்கும்!
பாலைச் செம்பில் நிறைக்கும்!
ஆலைச் சத்தம் போலக்
கத்தும் கன்றை முறைக்கும்! 5

கள்ளிச் சாற்றைப் போலக்
கறக்கும் எருமைப் பாலைச்
சுள்ளி எரித்துக் காய்ச்சித்
துளிமோர் விட்டால் போச்சு! 6

எருமைத் தயிரோ கட்டி!
எடுக்கும் வெண்ணெய் கெட்டி!
உருகும் நெய்யைக் கொட்டி உண்ண வயதும் கெட்டி! 7

கொம்பை ஆட்டித் தட்டும்!
ஒன்றோ டொன்று முட்டும்!
வம்புக் குப்போ காது!
வந்த தைவி டாது! 8

தொட்டி நீரில் மூழ்கித்
துறுத்துத் துறுத்துக் குடிக்கும்!
கட்டிப் பிண்ணாக் கோடு
கலந்த தவிடும் குடிக்கும் 9


குழந்தை இலக்கியம் ♦ 55