பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
என் உரை

பாட்டும் கதையும் குழந்தைகளுக்குப் பேரின்பம் ஊட்டுவன. பிஞ்சு உள்ளங்களில் இனிய எளிய முறையில் நல்லறிவைச் சேர்க்கும் முயற்சியே இக்‘குழந்தை இலக்கிய’த்தின் குறிக்கோள் ஆகும்.

இதனைத் தமிழகச் செல்வங்களுக்குப் பயன்படும் வகையில் தொகுத்துதவிய என் அருமை நண்பர்கட்கும், கண்கவர் ஓவியங்களை அமைத்தும் அழகுற அச்சிட்டும் நூல் வடிவாகக் கொண்டுவந்த வள்ளுவர் பண்ணை உரிமையாளர் திரு. ந. பழநியப்பருக்கும், கருத்துரை நல்கியுதவிய சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் தமிழ் அகராதித் துறைத் தலைமையாசிரியர் உயர்திரு. டாக்டர் அ. சிதம்பரநாதர், எம்.ஏ., எம்.எல்.சி., அவர்கட்கும் என் நன்றி!

வாழ்க குழந்தைகள்! வாழ்க தமிழ் மொழி! வாழ்க நம் நாடே!

சேலியமேடு
15-6-1959

வாணிதாசன்