பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
36

வாய்க்கால் நீரில் தலையைவிட்டு
வாத்து நத்தை மேயும்!
வயல்புகுந்து நெல்லை மேய
அறுத்த தாளும் சாயும்!1

வாய்க்கால் வளையில் அலகைவிட்டு
வந்த நண்டைக் கொத்தும்!
வளையில் நண்டு வாயைக்கெளவ
வாத்தி ரைந்து கத்தும்!2

தாங்கல் நீரில் மூழ்கியுடல்
தலையைத் தூய்மை செய்யும்!
தரையில் வந்தே அந்திநேரம்
மாலை வெய்யில் காயும்! 3


குழந்தை இலக்கியம் ♦ 77