இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாய் செய்த தவம்
9
அரசமரம் கட்டுச் சாலைகள் வைத்துச் சத்திரங் கட்டித் தவம் செய்தாள் ஒரு மாது. “விளக்கிலிட்ட வெண்ணெயைப்போல்” அவர்கள் உருகி நிற்கையில், “கலத்தில் இட்ட” சோற்றைப் போல அவர்கள் குழந்தைப் பசி போக்க அவன் பிறந்தானாம்.
- அரசைப் பதிப்போமோ அதிகதவம் செய்வோமோ
- சாலைகளை வைப்போமோ சத்கிரங்கள் கட்டுவமோ
- கொழுந்தைப் பதிப்போமோ கோடிதவம் செய்வோமோ!
- விளக்கிலிட்ட வெண்ணெயைப்போல் வெந்துருகி நிற்கையிலே ::கலத்திலிட்ட சோறதுபோல் கண்கலக்கந் தீர்த்தாயோ !
வேறு ஒருத்தி தான் செய்த வேறு தவ விரதங்களைச் சொல்கிறாள். .
- ஆறிரண்டும் காவேரி அதன் நடுவே சீரங்கம்
- சாமிரெண்டு கையாலே தந்தஎன்றன் திரவியமோ !
- கங்கைபுளை ஸ்ரீநாதன் கருணையினால் என்வயிற்றில்
- மங்களமாய் வந்துதித்த மணியேநீ கண்வளராய் !
- சரியாய்த் தவந்தானம் தருமங்கள் செய்தாங்கள்
- கலிதீர்க்க வந்துதித்த காதலனே கண்வளராய் !