பக்கம்:குழந்தை உலகம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர் அடித்தார்?

13


குட்டையாய்த் தேங்கிக் குதிரை குளிச்சேறி
வாய்க்காலாய்ப் பாய்ந்து வழிப்போக்கர் கால்அலம்பி
இஞ்சிக்குப் பாய்ந்து எலுமிச்சை வேரோடி
நார்த்தைக்குப் பாய்ந்து நடுவே பலாப்பழுத்து
மாதுளைக்குப் பாய்ந்து மருதாணி வேரோடி
வாழைக்குப் பாயச்சே மாறிற்றாம் கண்ணீர் !

கண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ, அதைப் பற்றிய தாலாட்டுப் பாட்டு ஒடிப் பாய்ந்து, குழந்தை குறட்டை விட்டுத் தூங்கும்போது நின்றுவிடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/22&oldid=1047196" இலிருந்து மீள்விக்கப்பட்டது