பக்கம்:குழந்தை உலகம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4. அம்மான் பெருமை

ஒரு வீட்டில் குழந்தை பிறந்ததென்றால் குழந்தையின் தாய்க்கும் தங்தைக்கும் அளவற்ற மகிழ்ச்சி உண்டு; ஆனால் அது வெளிப்படையாகத் தோற்றாது. அக்காதலர்களுடைய உள்ளத்துக்குள்ளே இன்ப ஊற்றுச் சுரந்து கொண்டிருக்கும். வீட்டிலுள்ள பாட்டனாரும் பாட்டியும் மற்றப் பெரியவர்களும் தங்கள் ஆனந்தத்தை வெளிப்படையாகவே காட்டுவார்கள். குழந்தையின் அழகையும், பேச்சையும், அங்க அடையாளங்களையும் வருணித்து வருணித்துப் பாராட்டுவார்கள்.

இந்தப் பாராட்டானது குழந்தையின் தாய்மாமன் வீட்டில் பின்னும் அதிகமாக இருக்கும். இந்த நாட்டு வழக்கப்படி குழந்தை உதயமாவதே தாய்மாமன் வீட்டில் தானே? கரு முதிர்ந்த காலத்தில் பெண்ணுக்கு வேண்டியவற்றை அளித்து மனம் கோணாமல் உடல் வாடாமல் மலரைப் போலப் பாதுகாக்கும் இயல்பை அவளுடைய பெற்றோர் படைத்திருக்கிறார்கள். அவள் கருவுயிர்க்கும் காலத்திலும் கவனித்துப் பார்ப்பார்கள். கருவுயிர்த்த பின் தாயையும் குழந்தையையும் பொன்னைபோல் போற்றுவார்கள். குழந்தை பிறந்தவுடன் முதல் மகிழ்ச்சி அந்த வீட்டினருக்குத்தான்.

தங்கள் வீட்டுப் பெண் வேறு வீட்டில் வாழ்க்கைப் பட்டு நல்ல பெயர் வாங்கி வருகிறாள் என்பதில் அவர்களுக்கு உண்டான திருப்தி அதிகம். இல்லறத்தின் பயனாக அவள் கருவுற்றிருக்கிறாள் என்ற செய்தி அவர்கள் காதில் ஜில்லென்று விழுந்தது. அப்பொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/23&oldid=1047197" இலிருந்து மீள்விக்கப்பட்டது