இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
30
குழந்தை உலகம்
- நிலா நிலா எங்கே போனாய்? மணியாங் குளத்துக்கு
மண் எடுக்கப் போனேன்.
- மண் எதற்கு ? சொப்புப் பண்ண.
- சொப்பு எதற்கு? பணம் போட.
- பணம் எதற்கு ? மாடு வாங்க.
- மாடு எதற்கு ? சாணி போட.
- சாணி எதற்கு? வீடு மெழுக
- விடு எதற்கு? பிள்ளை பிறக்க.
- பிள்ளை எதற்கு ?
- ஒலைப் பாயிலே ஒடி விளையாட
- ஈச்சம் பாயிலே இருந்து விளையாட
- கோரைப் பாயிலே குதித்து விளையாட
- பிடிப்பம் பாயிலே பெரண்டு விளையாட
- தாழம் பாயிலே தவழ்ந்து விளையாட
- எண்ணெய்க் குடத்திலே துள்ளி விளையாட
வேறுவிதமான பாட்டு ஒன்று வருமாறு:—
- அம்புலி அம்மானே ஆடு சித்தப்பா
- சோதி பெரியவனே சுக்கல என் தம்பி
- எங்கெங்கே போனாய் ?ஆத்தி பறிக்கப் போனேன்
- ஆத்தி என்னத்துக்கு ? அம்பி பிறக்க
- அம்பி என்னத்துக்கு? ஆத்து மணலிலே சேர்ந்து விளையாட.
இப்படியாக நம் கண் முன்னே நிலாவை வைத்துக் கவிதை செய்கிறார்கள் தமிழ்நாட்டுத் தாயும் குழந்தைகளும்.