இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34
குழந்தை உலகம்
- கதை கதைத்ததாம் கத்திரி பூத்ததாம்
- எலி சிரித்ததாம் பூனை பெண்டாட்டிக்கு அழுததாம்!
- பாக்கு பாக்கு பழையம் பாக்கு
- தேக்கு தேக்கு தென்னந் தேக்கு
- வெட்டிப் பாத்தா சொத்தைப் பாக்கு.
- ஜிட்டான் ஜிட்டான் குருவி ஜினுக்கிச்சான்—அந்த
- ஜீவ ரத்னப் பொண்ணு மேலே கணக்குத்தான்!
- கள்ளுக் குடிச்ச வெறியிலே
- கண்ணு ரெண்டும் தெரியலே
- நேத்த டிச்ச ஜூரத்திலே
- எப்படி ஏறுவே மரத்திலே?
- வெத்தலைக் கட்டு விரியக் கட்டு
- தோட்டத்துக் காரனைப் புடிச்சுக் கட்டு.
- அதோ பாரு மைனா
- ஆசு பத்திரிக் கொய்னா
- எங் கப்பன் நயினா
- நான் போறேன் சைனா.
- தவளைகளாம் தவளைகளாம்
- திண்டி வனத்துத் தவளைகளாம்
- காஞ்சீ புரத்துத் தவளைகளாம்
- தவளை ரெண்டுங் கூடிக் கிச்சாம்
- தாலி ஒண்ணும் கட்டிக் கிச்சாம்
- டம் டம் டம் டம்!