பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தங்தை தாய் தந்தது

7


முடியுமா என்பன போன்ற கேள்விகளுக்குச் சாஸ்திர முறையாக எடுத்துக்கூற அவர்களுக்குத் தெரியாது. பொதுப்படையாகப் பெற்றோர்களின் உடல் தோற்றத்தையும் உள்ளத் தன்மைகளையும் குழந்தைகளிடம் காணலாகும் என்று அனுபவத்தின் மூலம் அறிந்திருக்கிறோம். நமது நூல்களும் ஆங்காங்கு இதனைக் கூறியுள்ளன. மனத்தத்துவர்கள், உயிர்நூல் வல்லுனர்கள் முதலானவர்கள் ஆராய்ச்சி செய்து கண்டுள்ள முறைப்படி அவ்வொற்றுமைகளுக்குள்ள காரணத்தை இங்கு எடுத்துக்கூற விரும்புகிறேன்.

பெற்றோருக்கும் குழந்தைக்கும் தொடர்பை உண்டாக்குவது ஒரே ஒரு சிறிய உயிரணுதான். ஒரு சிறிய அணுப்போன்ற உயிர். அது இத்தனை ஆச்சரியமான காரியத்தைச் செய்துவிடுகிறது !

ஒரே ஒரு உயிரணு என்றுதானே சொன்னேன் ? அதுதான் பூரித்த அண்டம் (Fertilised Egg) என்பது. அந்தப் பூரித்த அண்டத்திற்குக் காரணமாக இரண்டு அணுக்கள் இருக்கின்றன. ஒன்று தந்தையிடமிருந்து வருவது மற்றென்று தாயினிடத்திலே உண்டாவது. 'பணியிலோர் பாதி சிறுதுளி மாது பண்டியில் வந்து புகுந்து" என்று பட்டினத்துப் பிள்ளையார் பாடுகிறார், ஆமாம்,

தந்தையிடமிருந்து வருகின்ற அணு அத்தனை சிறியது தான் அதற்கு விந்தணு (Sperm Cell) என்று பெயர். புணர்ச்சியின்போது வெளிப்படும் விந்துவிலே லட்சக்கணக்கான விங்தணுக்கள் இருக்கின்றன.

விந்தணுவின் உருவத்தைப் படத்தில் பார்த்தீர்களா? அதற்கு ஒரு வால் இருப்பதைக் கவனியுங்கள். அந்த வாலைச்