இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
48
குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்
பொதுவாகக் கோபத்தினுல்தான் குழந்தையை அடிக்கிறோம். அடி படுகின்றபோது, "பெரியவர்களாக இருப்பதால்தான் அவர்கள் என்னை அடிக்கிறார்கள்” என்று குழந்தையின் மனத்தில் எண்ணம் உதயமாகுமாம். அந்த எண்ணம் வெறுப்புணர்ச்சிக்குக் காரணமாகிவிடும்.
சில பெற்றோர்கள் மித மிஞ்சிய அன்பு காட்டுவார்கள்; கோபம் வந்துவிட்டால் அளவுக்கு மிஞ்சிக் கடுமையாக இருப்பார்கள். இரண்டும் தவறு. அன்பு கொஞ்சம் அதிகமாகவே இருப்பதால் தீங்கில்லை. ஆனால், கண்டிப்பும், மிரட்டலும் அதிகமாக இருக்கக்கூடாது. குழந்தையின் மனத்திலே வெறுப்புணர்ச்சி முதலிய விரும்பத்தகாத உணர்ச்சிகள் தோன்றுவதற்கு அது காரணமாக இருக்கும்.
குழந்தை நமது அன்புக்குப் பாத்திரமானது; புதிதாக மலர்ந்த பூவைப் போன்றது. அதை அடிக்கக் கூடாது. அது அன்பிலேதான் முழு மலர்ச்சி பெறும்.