இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
58
குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்
நாய், பூனை முதலிய மிருகங்களையும் காக்கை, குருவி முதலிய பறவைகளையும் மனித உருவங்களையும், ரெயில், மோட்டார் முதலானவற்றையும் எழுதிக்காட்டக் குழந்தை ஆசைப்படுகிறது.
குழந்தைகளுக்குத் தொடக்கத்திலேயே நியமப்படி சித்திரம் வரையக் கற்றுக் கொடுக்க முயல்வது தவறாகும். வர்ணக்குச்சிகளை அல்லது பலவகை வர்ணங்களைக்கரைத்து