32
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
உடனே பந்தை வைத்திருப்பவர். தான் தப்பித்துக் கொள்வதற்காக, பந்தை அடுத்தவருக்கோ அல்லது எதிர்ப்புறத்தில் உள்ளவருக்கோ தூக்கி எறிந்துவிட வேண்டும். நடுவில் இருப்பவர் அம்முறை ஏமாந்துபோய், மீண்டும்பந்திருக்கும் இடம் நோக்கிப்பாய்ந்தோடுவார்.
இவ்வாறு மாறி மாறிப் பந்தை, மாற்றிக்கொண்டே இருக்கும்பொழுது, எதிர்பார்த்து வருகின்றவர் ஏமாறி ஏமாறி ஒடித் தடுமாறும் அளவுக்கு ஆட்டம் காட்ட வேண்டும்.
குறிப்பு:
பந்தை ஒழுங்காக எறியாதவர், அல்லது பந்தை சரியாகப் பிடிக்காது கீழே விழ விடுபவர் நடுவில் நிற்பவராக ஆட வேண்டியவராகி விடுவார். ஒருவர் கையில் இருக்கும்பொழுதே நடுவில் நிற்பவர் வந்து பந்தைத் தொட்டுவிட்டாலும், அவரும் நடுவில் நின்றாடுபவராகி விடுவார்.
நடுவில் நின்று ஆடக் கூடியவர் சுறுசுறுப்பாக இருந்தால்தான் ஆட்டமும் சுவையாக இருக்கும். பந்தைப் பிடிப்பவர்களும் எறிபவர்களும் பம்பரம்போல் சுழன்று பரபரப்புடன் ஆடினால், ஆட்டம் காண்பதற்கும் ஆடுதற்கும் மிக அருமையானதாக அமையும்.
16. குரங்காட்டம் (ஆ)
|
அமைப்பு:
15வது குழு விளையாட்டுப் போலவே இந்தவிளையாட்டையும் வியையாட வேண்டும் ஆனால், இதில் சிறிது மாறுபாடு உண்டு.