இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விளையாடிமகிழவும் அலைபாயும் மனம் நீங்கி, சுகமான வாழ்வு பெறவும் வாழ்த்துகிறேன்.
எந்த நிலையிலும் என்மேல் பேரன்பு பூண்டு, வாழ்வின் வழிகாட்டியாகத் திகழும் என் ஆசிரியர், லெட்சுமிபாய் தேசிய உடற்கல்விக் கல்லூரி முதல்வர் டாக்டர் M. ராப்சன் அவர்களை இந்த நேரத்தில் நன்றிப் பெருக்குடன் நினைத்து மகிழ்கிறேன்.
சிறந்த முறையில் நூலாக ஆக்கித் தந்திருக்கும் அச்சகத்தாருக்கும், நூல் வெளியாவதற்கு திரு. ஆர். ஆடம் சாக்ரட்டீஸ் மிகவும் அரும்பாடுபட்டிருக்கிறார்.
அனைவருக்கும் என் அன்பு கலந்த நன்றி.
என் நூல்களனைத்தையும் விரும்பி வாங்கி, ஆதரித்து என் முயற்சிக்குத் துணைதரும் நல்லோர் அனைவருக்கும் நன்றி.
ஞானமலர் இல்லம் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
சென்னை - 17.