62
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
ஆட்டத்தில் பங்கு பெறுவோர்கள் அனைவரும், தனது கால் சட்டையின் பின்புறத்தில் கைக் குட்டையை இணைத்து, வால்போல் வைத்துக் கொண்டு, விளையாடத் தயாராக நிற்க வேண்டும்.
ஆடும் முறை:
ஆட்டத் தொடக்கத்திற்குப் பிறகு, ஒவ்வொருவரும் பிறருடைய வாலைப் பிடுங்கி எறிவதிலேயே குறியாக செயல்பட வேண்டும். வாலை இழந்தவர்கள் உடனே ஆட்டத்தைவிட்டு வெளியேறி விடவேண்டும்.
அதே சமயத்தில், தன் வாலை பிறர் பிடுங்கிவிடாமல் இருக்கவும் மிகவும் எச்சரிக்கையுடன் இயங்க வேண்டும்.
இறுதிவரை, தன் வாலை இழக்காமல் இருப்பவரே, இந்த விளையாட்டில் வெற்றி பெற்றவராகிறார்.
40. காலாட்டம்
|
ஆட இருப்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆடுகளத்தின் அளவை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
அமைப்பு:
ஆட்டத்தில் கலந்து கொள்வோர் அனைவரும், வசதிக்கேற்ப, தன் ஒரு காலைப் பின்புறமாக மடக்கித் தூக்கி, இரு கைகளாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டு, ஒற்றைக் காலால் நிற்கவும்.