கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்
89
விளையாடத் தொடங்குவதற்கு முன், இருவரது கண்களையும் கைக்குட்டையால் கட்டிவிட வேண்டும்.
இப்பொழுது, குருட்டுப் பூனை, குருட்டு எலியைப் பிடிக்கப் போகிறது.
எலியாக இருப்பவர் சப்தம் செய்யாமல் நகரலாம், முடிந்தால் சப்தம் செய்யலாம், சப்தம் செய்யாவிடில், அவரது காலடி ஓசையைக் கேட்டு, பின் தொடர்ந்து சென்றே பூனை பிடிக்க வேண்டும்.
பூனை எலியைப் பிடித்தால், வெற்றிபெற்றது பூனையென்றும், இல்லையென்றால் பூனை தன் தோல்வியை ஒப்புக் கொள்வேண்டும்.
பிறகு - வேறு இருவர் இந்த விளையாட்டைத் தொடர்ந்து ஆட, ஆட்டம் தொடரும்.
66. கதையோ கதை
|
விளையாட்டை நடத்தும் பொறுப்பேற்றிருப்பவர், கதை ஒன்றினை முன்னரே தயாரித்து வைத்துக் கொள்ளவேண்டும்.
அந்தக் கதையில் வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும், முன்னுக்குப் பின் முரணானவைகளாகவே இருக்க வேண்டும்.
கதையைக் கேட்டுக்கொண்டிருக்கும் மாணவர்கள், உடனே குறுக்கிட்டு எதுவும் பேசாமல், என்னென்ன