பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் கெடிலம்

105



திருமங்கையாழ்வார் திருமொழி

திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியுள் - திருவயிந்திரபுரம் பற்றிய திருமொழியில் இரண்டிடங்களில் கெடிலத்தின் வளத்தைப் புகழ்ந்துள்ளார்; அவை வருமாறு;

மூன்றாம் பத்து - முதல் திருமொழி

“வரை வளந்திகழ் மதகரி மருப்பொடு
மலைவள ரகிலுந்தி
திரை கொணர்ந்தனை செழுநதி வயல்புகு
திருவயிந் திரபுரமே”

“.....குலவுதண் வரைச்சாரல்
கால்கொள் கண்கொடிக் கையெழக் கமுகிளம்
பாளைகள் கமழ்சாரல்
சேல்கள் பாய்தரு செழுநதி வயல்புகு
திருவயிந் திரபுரமே”

கெடிலம் காட்டு விலங்குகளையும் மணமிக்க மரங்களையும் இன்னபிற மலைவளங்களையும் உந்திக்கொண்டு மலைச்சாரலில் ஓடிவருவதாகவும், கமுகஞ் சோலைகள் சூழ்ந்திருப்பதாகவும், வயல்களில் பாய்ந்து நாட்டை வளப்படுத்துவதாகவும் ஆழ்வார் அறிவித்துள்ளார். திருமங்கை மன்னர் தம் பாடல்களில் ‘கெடிலம்’ என்னும் சிறப்புப் பெயரால் ஆற்றைக் குறிப்பிடாமல், ‘செழு நதி’ எனப் பொதுப் பெயராலேயே சுட்டியுள்ளார். ஒருவேளை, கெடிலம் நதிகளுக்குள் சிறந்தது; எனவே, நதி என்று பொதுவாகச் சொன்னாலும் அது கெடிலத்தையே குறிக்கும் என்று ஆழ்வார் சிறப்பாக எண்ணி யிருப்பாரோ என்னவோ! நதியிலும் ‘செழுநதி’ எனச் சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்

தொல்காப்பியத் தேவர் தமது திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பக நூலில் மூன்றிடங்களில் கெடிலத்தைப் பாடியுள்ளார். அவையாவன:

“ஐயர் திருக்கெடிலம் ஆட்டி”

(13)

“கைத்தலத் திருந்த புள்ளிமான் மறியர்