பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

கெடிலக்கரை நாகரிகம்



கடிலமா நதியதன் வடபால்’’

(45)

“முத்தினை முகந்துபவ ளக்கொடியை வாரி
மோதியீரு டண்டலை முறித்துமத குந்தித்
தத்திவரு சந்தன மெறிந்தகி லுருட்டித்
தாமரையு நீலமும ணிந்ததட மெல்லாம்
மெத்திவரு கின்றகெடி லத்து வடபாலே"

(100)

தொல்காப்பியத் தேவர், ‘திருக் கெடிலம்’ எனக் கெடிலத்தின் தெய்வத்தன்மையைச் சுட்டியுள்ளார்; ‘கடில மாநதி’ என அதற்கு ஒரு பேராற்றின் தகுதி அளித்துள்ளார். கெடிலத்தின் வெள்ளப் பெருக்கு உயர்ந்த மணிவகைகளையும் நறிய மரவகைகளையும் உருட்டிக் கொண்டு வந்து மதகுகளுடன் மோதிச் சோலைக்குள் புகுந்து பொய்கைகளை நிறைத்துச் செல்வ ஆரவாரம் புரிவதாகப் புலவர் பெருமான் புனைந்து பாடியிருப்பது படித்துச் சுவைத்தற்கு இன்பமாயுள்ளது.

பெரிய புராணம்

சேக்கிழாரின் பெரிய புராணத்தில் கெடிலம் பல பாடல்களில் புகழிடம் பெற்றுள்ளது. அவற்றுள் சில வருமாறு:

தடுத்தாட் கொண்ட புராணப் பகுதி

“விரிதிரைநீர்க் கெடிலவட வீரட்டா னத்திறை”

(84)

"பொன்திரளும் மணித்திரளும்
பொருகரிவெண் கோடுகளும்
மின்திரண்ட வெண்முத்தும்
விரைமலரும் நறுங்குறடும்
வன்திரைக ளாற்கொணர்ந்து
திருவதிகை வழிபடலால்
தென்திசையில் கங்கையெனும்
திருக்கெடிலம் திளைத்தாடி"

(89)

திருநாவுக்கரசர் வரலாற்றுப் பகுதி

“நீரார் கெடிலவட நீள்கரையில்”

(42)

"திரைக்கெடில வீரட்டா னத்திருந்த”

(69)