114
கெடிலக்கரை நாகரிகம்
மேற்கூறிய பெயர்க் காரணங்கள் நான்கினையும் தொகுத்து இரண்டாகச் சுருக்கிவிடலாம். அவையாவன:
1. மிகப்பெரிய தொண்டை நாட்டிற்கும் மிகப் பெரிய சோழ நாட்டிற்கும் நடுவே உள்ள ஒரு சிறு நாடு ஆதலின் நடுநாடு எனப்பட்டது. இந்தக் காரணம் பொருத்தமாகத்தான் தெரிகிறது.
2. முடியுடைப் பேரரசர் மூவர்க்கும் நண்பராய் - நடுநிலைமை உடையவராய் - வாழ்ந்த மலையமான் மரபினர் ஆண்டதால் நடுநாடு எனப்பட்டது. இந்தக் காரணமும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. இதன்படி பார்த்தால், இன்று உலகின் நடுநிலை நாடாகச் ‘சுவிட்சர்லாந்து’ என்னும் சிறுநாடு விளங்குவதுபோல, அன்று தமிழகத்தின் நடுநிலை நாடாக இது விளங்கி யிருந்தமை புலப்படும். இந்தக் கருத்துக்கு, புலவர் கபிலர் மலையமான் திருமுடிக் காரியின்மேல் பாடியுள்ள
- "வீயாத் திருவின் விறல்கெழு தானை
- மூவருள் ஒருவன் துப்பா கியரென
- ஏத்தினர் தருஉம் கூழே நுங்குடி"
என்னும் புறநானூற்றுப் (122) பாடல் பகுதி தக்க சான்று.
கரையேறவிட்ட நகர்ப் புராண ஆசிரியர் நடுநாடு என்னும் பெயர் வந்ததற்குக் கூறும் காரணம் இங்கே மிகவும் குறிப்பிடப்பட்டு மகிழ்தற்குரியது. ‘தொண்டை நாடு சான்றோர் உடைத்து'; ‘சோழ நாடு சோறுடைத்து’. என்பன முதுமொழிகள், இவ்விரு நாடுகட்கும் நடுவில் இருத்தலாலும், இவ்விரு நாடுகளின் தனிச் சிறப்பான சான்றோரையும் சோற்று வளத்தையும் தான் ஒருசேரப் பெற்றிருத்தலாலும் இப் பகுதி ‘நடுநாடு’ எனப்பட்டது என அவர் கூறியுள்ளார்; பாடல் வருமாறு:
- [1]"சொற்றதிரு முனைப்பாடித் தூநாட்டை நடுநாடாச்
- சொல்வார் ஆன்ற
- கற்ற அறி வினரதற்குக் காரணநோக் கிடிற் சான்றோர்
- கனிந்துற் றோங்கித்
- துற்ற திரு நாட்டினுக்கும் சோறுகுறை வற்றவளம்
- சூழ்நாட்டிற்கும்
- ↑ கரையேறவிட்ட நகர்ப்புராணம் - திருநாட்டுப் படலம் - 37.