பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலநாட்டு வரலாறு

127


இணைத்து அரசோச்சிய பல்லவகுலப் பேரரசர்களின் பெயர்களும் அவர் தம் ஆட்சிக் காலமும் முறையே வருமாறு:

(முதல் வரிசை)
  1. முதலாம் குமார விஷ்ணு 325 - 35
  2. முதலாம் ஸ்கந்தவர்மன் 350 - 375
  3. வீரவர்மன் 375 - 400
  4. இரண்டாம் ஸ்கந்தவர்மன் 400 - 436
  5. முதலாம் சிம்மவர்மன் 436 -460
  6. மூன்றாம் ஸ்கந்தவர்மன் 460 - 480
  7. இரண்டாம் சிம்மவர்மன் 480 - 500
  8. முதல் நந்திவர்மன் எனக் கருதப் படுகிறது வேறு சிலரும் இருந்திருக்கலாம் 500 - 574?
(இரண்டாம் வரிசை)
  1. சிம்ம விஷ்ணு 574 - 600
  2. முதலாம் மகேந்திரவர்மன் 600 - 630
  3. முதல் நரசிம்மவர்மன் 630 - 668
  4. இரண்டாம் மகேந்திரவர்மன் 668 - 670
  5. முதலாம் பரமேசுரவர்மன் 670 - 680
  6. இரண்டாம் நரசிம்மவர்மன் 680 - 729
  7. இரண்டாம் பரமேசுரவர்மன் 730 - 731
  8. இரண்டாம் நந்திவர்மன் 731 - 795
  9. தந்திவர்மன் 795 - 845
  10. மூன்றாம் நந்திவர்மன் 844 - 866
  11. நிருபதுங்கவர்மன் 855 - 896
  12. அபராசித பல்லவன் 879 - 897

இந்த அட்டவணையில் உள்ளாங்கு, அபராசித பல்லவ மன்னனோடு ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பல்லவப் பேரரசு மறைந்தது. இதற்கு, விசயாலயச் சோழனும் அவர் மரபினரும் காரணராவர்.

பிற்காலச் சோழர் ஆட்சி

கி.பி. 897 ஆம் ஆண்டு கால அளவில், விசயாலய சோழன் மகன் முதலாம் ஆதித்த சோழன் அபராசித பல்லவனை வென்று திருமுனைப்பாடி நாட்டையும் தொண்டை நாட்டையும் மீண்டும் சோழப் பேரரசுடன் இணைத்துக் கொண்டான். இந்தப் பிற்காலச் சோழ மரபினரின் ஆட்சி, 897 ஆம் ஆண்டு தொட்டு 1279 ஆம் ஆண்டு வரை திருமுனைப்பாடி நாட்டில் நிலவியது.