பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

கெடிலக்கரை நாகரிகம்


 இவர்களின் பெயர்களும் ஆட்சிக் காலமும் முறையே வருமாறு:

விசயாலயச் சோழன் 870
முதலாம் ஆதித்த சோழன் 871 - 907
முதலாம் பராந்தகன் 907 - 954
கண்ட ராதித்தன் 954 - 957
அரிஞ்சயன் (சில திங்கள்கள்) 957
இரண்டாம் பராந்தகன் 957 - 973
உத்தம சோழன் 973 - 985
முதலாம் இராசராசன் 985 - 1014
முதலாம் இராசேந்திரன் 1012 - 1044
முதலாம் இராசாதிராசன் 1044 - 1054
இரண்டாம் இராசேந்திரன் 1054 - 1063
வீர ராசேந்திரன் 1063 - 1070
அதிராசேந்திரன் 1070
முதலாம் குலோத்துங்கன் 1070 - 1120
விக்கிரம சோழன் 1120 - 1135
இரண்டாம் குலோத்துங்கன் 1136 - 1150
இரண்டாம் இராசராசன் 1151 - 1163
இரண்டாம் இராசாதிராசன் 1163 - 1178
மூன்றாம் குலோத்துங்கன் 1179 - 1216
மூன்றாம் இராசராசன் 1216 - 1246
மூன்றாம் இராசேந்திரன் 1247 - 1279

மூன்றாம் இராசேந்திரனுக்குப் பிறகு சோழப் பேரரசு வீழ்ச்சியடைய, சடையவர்மன் சுந்தர பாண்டியன் தலைமையில் பாண்டியப் பேரரசு எழுச்சி பெற்றது.

இராட்டிர கூடர்

பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்கிடையே பல மரபுகளைச் சேர்ந்த மன்னர்கள் சில பல ஆண்டுகள் தலைதூக்கிப் பின்னர் மறைந்தனர். இவர்களுள் இராட்டிரகூட மரபினரும் ஒருவர். இவர்கள் கி.பி. 950 தொடங்கி 170 வரையும் கண்ணை முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். இரண்டாம் பராந்தகனும் முதலாம் இராசராச சோழனும் இவர்களை ஒடுக்கி ஒன்றுமில்லாமல் செய்து விட்டனர், இராட்டிரகூடர்களுள் மூன்றாம் கிருட்டிணன் என்பவன் சிறிது காலம் இப்பகுதியை ஆண்டிருக்கிறான்.

காடவராயர்

சோழர் ஆட்சிக் காலத்தில் அவர்களின் கீழ்ச் சிற்றரசராய், காடவராயர் என்னும் மரபினர் திருமுனைப்பாடி நாட்டைச் சில