பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை அரசுகள்

139




மலையமான் திருமுடிக்காரி

பேரும் ஊரும்

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது என்று கருதப்படும் சங்க காலத்தில் வாழ்ந்தவன் மலையமான் திருமுடிக்காரி. இவன், காரி, திருமுடிக்காரி, மலயன், மலயமான் என்றெல்லாம் இலக்கியங்களில் அழைக்கப்பட்டுள்ளான். மலையமான் என்பது மரபுப்பெயர்; காரி இயற்பெயர். இவனது நாடு, தென்பெண்ணையாறும் கெடிலமும் பாய்ந்து வளப்படுத்தும் திருமுனைப்பாடி நாடாகும். மலையமான் ஆண்டதால் மலையமானாடு. மலாடு என்று இது பண்டு அழைக்கப்பட்டது. மலையமாநாடு என்பதன் சுருக்கமான மரூஉப் பெயர் மலாடு என்பது. இது முன்னர் விளக்கப்பட்டுள்ளது.

காரியின் தலைநகர் கோவல் எனப்படும் திருக்கோவலூர், முள்ளூர் மலை இவனுக்கு உரிய மலை. இச் செய்திகளை, அம்மூவனார் பாடிய

“துஞ்சா முழவின் கோவல் கோமான்
நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்றுரை

என்னும் அகநானூற்றுப் (35) பாடல் பகுதியாலும், கபிலர் பாடிய

“முரண்கொள் துப்பிற் செவ்வேல் மலையன்
முள்ளூர்க் கானம் நண்ணுற வந்து

என்னும் குறுந்தொகைப் (312) பாடல் பகுதியாலும், கல்லாடனார் பாடிய

“முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி"

என்னும் அகநானூற்றுப் (209) பாடல் பகுதியாலும், கபிலர் பாடிய

“தொலையா நல்லிசை விளங்கு மலையன்...'
பயன்கெழு முள்ளூர் மீமிசை

என்னும் புறநானூற்றுப் (123) பாடல் பகுதியாலும் பிறவற்றாலும் அறியலாம்.

கொடை வீரம்

காரி கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகப் போற்றப் பெறுகிறான். இவன், தன்னை நாடிவரும் புலவர்கட்கும்