பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

கெடிலக்கரை நாகரிகம்


புதுமையி னிறுத்த புகழ்மேம் படுந.......
விடர்ப்புலி பொறித்த கோட்டைச் சுடர்ப்பூட்
சுரும்பார் கண்ணிப் பெரும்பெயர் நும்முன்
ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச் சென் றுணீஇயர்
உயர்ந்தோ ருலகத்துப் பெயர்ந்தன னாகலின்......
நீதோன் றினையே நிரைத்தார் அண்ணல் ........
கோடை நீடிய பைதறு காலை.....
உருமுரறு கருவிய மழைபொழிந் தாங்கே.

(28 அடிகள் கொண்ட பாடலிலிருந்து, இன்றியமையாத 10 அடிகள் மட்டும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.) இப் பாடலில் - உள்ள பெரும்பெயர் நும்முன்’ என்னும் தொடருக்கு, ‘பெரிய புகழினையுடைய நும்முன்னாகிய தந்தை’ என, பெயர் தெரியாத பழைய உரையாசிரியர் ஒருவர் பொருள் எழுதியுள்ளார்; இக்காலத்து உரையாசிரியர் சிலரும் இவ்வாறே கூறுகின்றனர். இங்கே, பெரிய புகழுடைய தந்தை என்று குறிப்பிடப் பட்டிருப்பவன், மலையமான் திருமுடிக் காரியாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில், வரலாற்றுக்குத் தெரிந்தவரையில், மலையமான் மரபில் மிகவும் புகழ்பெற்று விளங்கியவன் திருமுடிக்காரி தானே! பாடலில் உள்ள ஈரடிகள் இந்தக் கருத்துக்கு மிகவும் துணை செய்கின்றன. திருக்கண்ணனுடைய முன்னோன், இந்த உலகில் செய்த நல்வினையின் பயனை அந்த (மேல்) உலகில் நுகர்வதற்காகச் சென்றுள்ளானாம். இக்கருத்தை, ‘நும்முன், ஈண்டுச் செய் நல்வினையாண்டுச்சென் றுணீஇயர், உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன்’ என்னும் அடிகள் உணர்த்துகின்றன. அப்படி, இவ்வுலகில் மிகுதியாக நல்வினை - நல்லறம் செய்திருக்கும் மன்னன் மலையமான் மரபில் திருமுடிக்காரிதான். அவன் தன் உடைமைகளை யெல்லாம் வந்து கேட்ட இரவலர்க்கு உரித்தாக்கி விட்டதாகப் புறப்பாடல்களும் பிறவும் அவனைப் புகழ்ந்துள்ளன. கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகவும் அவன் போற்றப் படுகிறான். எனவே, இப் பாடலில் ‘நும்முன்’ என்று சுட்டப்படுபவன் மலையமான் திருமுடிக்காரியே. அங்ஙனமெனில், மலையமான் திருமுடிக் காரிக்கு அடுத்தாற்போல் பட்டத்துக்கு வந்தவன் மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் என்பது தெளிவு.

இந்தத் திருமுடிக்காரிக்கும் திருக்கண்ணனுக்கும் இடையேயுள்ள உறவுமுறை யாது? பாடலிலுள்ள ‘நும்முன்’ என்னும் தொடருக்கு ‘நும்முன்னாகிய தந்தை’ எனப் பழைய