பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை இலக்கியங்கள்

217



ஊர் மொத்தப் பாடல்
திருவெண்ணெய் நல்லூர் 1
திருக்கூடலையாற்றுார் 1
விருத்தாசலம் (திருமுதுகுன்றம்) 1
நெல்வாயில் அரத்துறை 1
யாழ்ப்பாணாயன் பட்டினம் 1
திருமுட்டம் 1

இவ்வூர்களில், யாழ்ப்பாணாயன் பட்டினம் என்பது திருவெருக்கத்தம் புலியூராக இருக்கலாம் எனச் சிலர் கருதுகின்றனர். நடுநாட்டில் மூவர் தேவாரம் பெற்றுள்ளவற்றுள் பெரும்பாலான ஊர்கள் அருணகிரியாரின் திருப்புகழும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தென்னார்க்காடு மாவட்டத்தில் மிகச்சிறந்த முருகன் திருப்பதியாய் விளங்கும் காரணத்தால் மயிலமும் இங்கே சேர்த்துக் கூறப்பட்டுள்ளது. அருணகிரியார் தமது சொந்த ஊராகிய,திருவண்ணாமலைமேல் எழுபத்தெட்டுப் பாடல்கள் பாடியிருப்பது கருதத்தக்கது.

அருணகிரிநாதர் வில்லிபுத்துரார், வரபதியாட்கொண்டான் முதலியோர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்; எனவே அவரது காலம் பதினைந்தாம் நூற்றாண்டாகும்; ஆகவே, திருப்புகழ் பதினைந்தாம் நூற்றாண்டு இலக்கியம் என்பது போதரும். அருணகிரிநாதர் திருப்புகழின் மாதிரிக்காக, கெடிலக்கரைத் திருவதிகை முருகன்மேல் பாடியுள்ள முதல் திருப்புகழ் வருமாறு:-

திருவதிகை
தனனதனத் தனனதனத் தனனதனத் தனனதனத்
தனனதனத் தனனதனத் தனதான.

"பரவுவரிக் கயல்குவியக் குயில்கிளியொத் துரைபதறப்
பவளநிறத் ததரம்விளைத் தமுதுறல்

பருகிநிறத் தரளமணிக் களபமுகைக் குவடசையப்
படைமதனக் கலையடவிப் பொதுமாதர்

சொருகுமலர்க் குழல்சரியத் தளர்வுறுசிற் றிடைதுவளத்
துகிலகலக் ருபைவிளைவித் துருகாமுன்