பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

கெடிலக்கரை நாகரிகம்


"தென்புறநின் றணிவடக்கைக் காட்டி விட்டார்
வெள்ளமதுஞ் சென்ற தாங்கே"

என்னும் பாடற்பகுதிகளால் அறியலாம். .

இந்நூலில் இராவணன் குறித்தும் திருநாவுக்கரசர் குறித்தும் ஒரு சுவையான செய்தி கூறப்பட்டுள்ளது: பண்டு இராவணன் கைலை மலையைப் பெயர்த்தெடுக்க முயன்றான். சிவபெருமான் கால் பெருவிரலால் ஊன்றி மலையின் கீழே அவனை அகப்படச்செய்தார். இராவணன் வெளியேறும் வழியறியாது திணறித் திண்டாடினான். அப்போது கைலைமலையை வலம் வந்து கொண்டிருந்த வாகீசர் என்னும் முனிவர் இராவணன்பால் இரக்கமுற்று ‘இறைவன் மேல் சாமகானம் பாடினால் அவர் மகிழ்ந்து விடுவிப்பார்’ என்பதைக் குறிப்பால் உணர்த்தினார். அவன் அவ்வாறே பாடி இறைவனை மகிழ்வித்து மலையடியிலிருந்து விடுதலை பெற்றான். பின்னர்ச் சிவபெருமான் வாகீச முனிவரை அழைத்து, நீ இராவணனுக்குச் சூழ்ச்சி சொல்லித் தந்ததனால், மண்ணுலகில் பிறந்து உழன்று பின் ஈண்டு வருக’ என ஆண்ணயிட்டார். அவ்வாறே அவர் திருவாமூரில் வந்து திருநாவுக்கரசராகப் பிறந்தார்.

இவ்வாறு திருநாவுக்கரசருக்குத் தெய்வப் பிறப்பு கற்பிக்கப்பட்டுள்ளது. இந்தச்செய்தி கரையேற விட்ட படலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படலத்தில், இராவணன் பாடிய ‘சாமகானம்’ என்பதாக ஒரு பாடல் உள்ளது. அளபெடை வடிவிலுள்ள அப்பாடல் மிகவும் சுவையானது. அது வருமாறு:

"ஓஒ மாஅ தேஎ வாஅ ஊஉ மாஅ தேஎ சாஅ
சீஇ மாஅ தாஅ வாஅர் தேஎ காஅ வேஎ சாஅ
ஆஅ மாஅ நாஅ யேஎ னாஅ வீஇ போஒ மாஅ
காஅ மாஅ ரீஇ நீஇ காஅ வாஅ சாஅ மீஇ”

இந்தப் பாடலை அளபெடை நீக்கிப்பார்த்தால் பின் வருமாறு இருக்கும்.

"ஒமா தேவா ஊமா தேசா
சீமா தாவார் தேகா வேகா
ஆமா நாயே னாவீ போமா
காமா ரீநீ காவா சாமீ”

இந்நூலாசிரியரின் சிறந்த கற்பனைப் புலமைக்குள் இந்த அளபெடைப் பாடல் ஒர் எடுத்துக் காட்டாகும். இந் நூலின் திருநகரப் படலத்தில்,"