460
கெடிலக்கரை நாகரிகம்
இனி, இந்தப் பகுதியில் பாடப்படும் பல்வேறு வகை நாட்டுப் பாடல்கள் வருமாறு:
1. தாலாட்டுப் பாடல்கள்
“ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ
ஆரடிச்சு நீ அழுதாய் -
அழுதகண்ணு நீர்தளும்ப
அடித்தாரைச் சொல்லியழு -
ஆக்கினைகள் செய்திடுவோம்
தொட்டாரைச் சொல்லியழு -
தொழுவிலங்கு பூட்டிடுவோம்
அத்தை அடித்தாளா
அலரிப்பூச் செண்டாலே
மாமன் அடித்தானா
மல்லிகைப்பூச் செண்டாலே
ஆரும் அடிக்கவில்லை
அங்கொருவர் தீண்டவில்லை
தானே அழுகிறாளாம் -
தாயாரைக் காணாமல்
புலம்பி அழுகிறாளாம் -
பெற்றவளைக் காணாமல்
ஆராரோ ஆரரிரோ நீயாரோ நானாரோ.”
“ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ
பாலும் அடுப்பினிலே பாலகனும் தொட்டிலிலே
பாலகனைப் பெற்றெடுத்த பாண்டியரும் கட்டிலிலே
பாலைத்தான் பார்ப்பேனா பாலகனைத் தூக்குவேனா
சோறும் அடுப்பினிலே சுந்தரியும் தொட்டிலிலே
சோற்றைத்தான் பார்ப்பேனா சுந்தரியைத் தூக்குவேனா
ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ.”
“ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ
மாமாங்க மாடி மதுரைக் கடலாடி
மாமாங்க ராயருட மலர்ப்பாதம் பெற்றாளாம்
சீரங்க மாடி சீர்மைக் கடலாடி
சீரங்க ராயருட சீர்ப்பாதம் பெற்றாளாம்
ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ.”