இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
462
கெடிலக்கரை நாகரிகம்
- வீதியிலே சாமி
- வெகுவேடிக்கை யாகவரும்
- தாதிமார் காண்பிப்பார்
- தவம்பெறவே கண்வளராய்
- கண்ணே உறங்குறங்கு
- கண்மணியே கண்ணுறங்கு."
- வீதியிலே சாமி
நீண்ட நாள் பிள்ளை இல்லாமல் இருந்து வயதான காலத்தில் பிறந்த பிள்ளைக்குப் பாடும் தாலாட்டுப் பாடல் பகுதி:
- "ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
- கண்ணே உறங்குறங்கு
- கண்மணியே நீஉறங்கு
- இலைவதங்கிக் கொடிகாஞ்சி
- இல்லையென்ற நாள்போக
- மழைபேஞ்சி கொடிதுளுத்து
- மாஞ்சிமுளைச்ச கண்ணே
- கறுத்ததலை நரைச்சி
- காலமெல்லாம் சென்றபோது
- வறுத்தபனிப் பயறாம்
- மாஞ்சமுளைச்ச கண்ணே
- இடிஞ்சமதி லெழுப்பி
- இருபுறமும் தூண்நிறுத்தி
- குறைஞ்ச மதிலுக்குக்
- கொடியேத்தவந்த கண்ணே
- கண்ணே உறங்குறங்கு
- கண்மணியே நீஉறங்கு
- ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
(காஞ்சி - காய்ந்து பேஞ்சி - பெய்து மாஞ்சி - மாய்ந்து; ஏத்த ஏற்ற)
- பச்சை இலுப்பை வெட்டிப்
- பால்வடியத் தொட்டிலிட்டு
- தொட்டில் இட்ட அம்மானே
- பட்டினியாய்ப் போகாதே
- பச்சை இலுப்பை வெட்டிப்