பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

462

கெடிலக்கரை நாகரிகம்


வீதியிலே சாமி
வெகுவேடிக்கை யாகவரும்
தாதிமார் காண்பிப்பார்
தவம்பெறவே கண்வளராய்
கண்ணே உறங்குறங்கு
கண்மணியே கண்ணுறங்கு."

நீண்ட நாள் பிள்ளை இல்லாமல் இருந்து வயதான காலத்தில் பிறந்த பிள்ளைக்குப் பாடும் தாலாட்டுப் பாடல் பகுதி:

"ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
கண்ணே உறங்குறங்கு
கண்மணியே நீஉறங்கு
இலைவதங்கிக் கொடிகாஞ்சி
இல்லையென்ற நாள்போக
மழைபேஞ்சி கொடிதுளுத்து
மாஞ்சிமுளைச்ச கண்ணே
கறுத்ததலை நரைச்சி
காலமெல்லாம் சென்றபோது
வறுத்தபனிப் பயறாம்
மாஞ்சமுளைச்ச கண்ணே
இடிஞ்சமதி லெழுப்பி
இருபுறமும் தூண்நிறுத்தி
குறைஞ்ச மதிலுக்குக்
கொடியேத்தவந்த கண்ணே
கண்ணே உறங்குறங்கு
கண்மணியே நீஉறங்கு
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ

(காஞ்சி - காய்ந்து பேஞ்சி - பெய்து மாஞ்சி - மாய்ந்து; ஏத்த ஏற்ற)

அம்மன் தாலாட்டுப் பாட்டு
பச்சை இலுப்பை வெட்டிப்
பால்வடியத் தொட்டிலிட்டு
தொட்டில் இட்ட அம்மானே
பட்டினியாய்ப் போகாதே