பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்களும் வாழ்க்கை முறையும்

463


நெல்லும் களத்தினிலே
நீரும் கிணற்றினிலே
உரலும் உலக்கையும்
ஊருணியான் சத்திரத்தே
அம்மியும் குழவியும்
ஆவுடையார் கோயிலிலே
ஆக்கி யிடும்தாதி
ஆலரசம் ஆகிவிட்டாள்
எனக்கும் தலைநோவு
இருந்துபோ அம்மானே
நாழித் தனைகுற்றி
நல்லருமைப் பால் காய்ச்சி
உண்ணுப்போ அம்மானே
ஊர்வழியும் தூரமுண்டு
தங்கிப்போ அம்மானே
காதவழி தூரமுண்டு
ஆராரோ ஆரரிரோ நீயாரோ நானாரோ.”

2. குழந்தைப் பாடல்கள்

இந்தப் பகுதியில் வழங்கும் பல்வேறு வகைக் குழந்தைப் பாடல்களின் மாதிரிக்காகச் சில பாடல்கள் வருமாறு:

குழந்தை தவழும் பாடல்
“தப்பளாங் குட்டி தவழ்ந்துவரத்
தரைஎத்தனை பாக்கியம் செய்ததோ
குட்டி யானை குதித்துவரக்
குடில்எத்தனை தவம் செய்ததோ!"
1
குழந்தை உணவுப் பாடல்
"மம்மு சுடம்மா மம்முசுடு
மாணிக்கக் கையாலே மம்முசுடு
அள்ளித் தின்னம்மா அள்ளித்தின்னு
அமிர்தக் கையாலே அள்ளித்தின்னு
பொட்டு குத்தம்மா பொட்டு குத்து
பொன்னான கையாலே பொட்டுகுத்து"
2