இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மக்களும் வாழ்க்கை முறையும்
465
- "தட்டாங்கி தைலம்மே
- தண்ணிக்கு வெந்நிக்குப் போகாதே
- தட்டான் கண்டால் மறுப்பான்
- தட்டிலே வச்சு நிறுப்பான்
- கோயில் மேளத்தைக் கொட்டுவான்
- கும்பிட்டுத் தாலி கட்டுவான்." 6
- "கண்ணான கண்ணுக்குக்
- காதுகுத்தப் போறோமென்னு
- முந்நூறு சேர்திறந்து
- முடியளந்து நெல்லுகுத்தி
- ஐந்நூறு தென்னைமரம்
- ஆளைவிட்டுக் காய்பறித்து
- எள்ளைப் பொரிச்சிக்கொட்டி
- இளந்தேங்காய் சீவிக்கொட்டி
- பச்சைப் பயறதனைப்
- பாங்காக வறுத்துப்போட்டு
- பாவைப் பதமாக்கிப்
- பக்குவமாய் அரிசிகிண்டி
- அள்ளி வழங்குங்கள்
- அருமைப் பிள்ளைகாப்பரிசி
- கொட்டி வழங்குங்கள்
- குழந்தைப் பிள்ளைகாப்பரிசி." 7
ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்திருப்பளதைப் பார்த்து மற்றச் சிறுவர்கள் பாடுவது
- "ஐயையோ ஐயையோ எனக்குஎன்னா
- ஆம்படையான் பெண்டாட்டி சோடிசோடி
- பொத்தல் செருப்பாலே போடுபோடு
- ஆம்படையான் பெண்டாட்டி சோடிசோடி
- பொத்தல் செருப்பாலே போடுபோடு
- ஐயையோ ஐயையோ அதோபாருங்கோ." 1