பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்களும் வாழ்க்கை முறையும்

465


"தட்டாங்கி தைலம்மே
தண்ணிக்கு வெந்நிக்குப் போகாதே
தட்டான் கண்டால் மறுப்பான்
தட்டிலே வச்சு நிறுப்பான்
கோயில் மேளத்தைக் கொட்டுவான்
கும்பிட்டுத் தாலி கட்டுவான்."
6
காதணி விழாப் பாடல்
"கண்ணான கண்ணுக்குக்
காதுகுத்தப் போறோமென்னு
முந்நூறு சேர்திறந்து
முடியளந்து நெல்லுகுத்தி
ஐந்நூறு தென்னைமரம்
ஆளைவிட்டுக் காய்பறித்து
எள்ளைப் பொரிச்சிக்கொட்டி
இளந்தேங்காய் சீவிக்கொட்டி
பச்சைப் பயறதனைப்
பாங்காக வறுத்துப்போட்டு
பாவைப் பதமாக்கிப்
பக்குவமாய் அரிசிகிண்டி
அள்ளி வழங்குங்கள்
அருமைப் பிள்ளைகாப்பரிசி
கொட்டி வழங்குங்கள்
குழந்தைப் பிள்ளைகாப்பரிசி."
7
3. சிறுவர் விளையாட்டுப் பாடல்கள்

ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்திருப்பளதைப் பார்த்து மற்றச் சிறுவர்கள் பாடுவது

"ஐயையோ ஐயையோ எனக்குஎன்னா
ஆம்படையான் பெண்டாட்டி சோடிசோடி
பொத்தல் செருப்பாலே போடுபோடு
ஆம்படையான் பெண்டாட்டி சோடிசோடி
பொத்தல் செருப்பாலே போடுபோடு
ஐயையோ ஐயையோ அதோபாருங்கோ."
1