மக்களும் வாழ்க்கை முறையும்
467
சிறுவர் சிறுமியர் ஒருவர் பின் ஒருவராகச் சாரையிட்டு வருவர். சிறுவர் இருவர் கைகோத்துக்கொண்டு நிற்பர்; இவர்களின் கோத்த கைகளின் கீழ்ச் சிறார்சாரை புகுந்து செல்லும். கடைசியில் வரும் சிறுவரைக் கைக்குள் வளைத்துக் கொள்வர்; மற்றவர் அவரை விடுமாறு கேட்பர்; இவர்கள் விடமாட்டேன் என்பர். இந்த விளையாட்டின்போது, சாரையில் செல்பவர்கள் ஒன்றிலிருந்து பத்து வரையுமாகப் பின்வருமாறு பாடிச் செல்வர்:
- “ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரே பூபூத்து
- இரண்டு குடம் தண்ணீர் ஊற்றி இரண்டே பூபூத்து
- ... ... ... .. ... ... ... ... ... ...
- பத்துக் குடம் தண்ணீர் ஊற்றிப் பத்தே பூபூத்து..."
என்று பாடிச் செல்வர். சாரையில் உள்ள ஒவ்வொருவராகப் பிடித்துக் கொண்டதும், சாரையின் தலைவர் பிடித்துக் கொண்டிருப்பவர்களிடம் தம் கணுக்கால், முழங்கால், இடுப்பு, கழுத்து ஆகியவற்றை முறையே ஒவ்வொன்றாகக் காட்டி, ‘அவ்வளவு பொன் தருகிறேன் விட்டுவிடு’ என்று கேட்பார்; அவர்கள் விடமாட்டோம் என்பர். இதற்குரிய பாடலாவது:
- “இத்த மட்டும் பொன்னு தரேன் உடுடா துலுக்கா
- -உட மாட்டேன் மலுக்கா
- அத்த மட்டும் பொன்னு தரேன் உடுடா தலுக்கா
- -உட மாட்டேன் மலுக்கா
- கொட்டாஞ்சி பொன்னு தரேன் உடுடா துலுக்கா
- -உடமாட்டேன் மலுக்கா
- கூடைப் பொன்னு தரேன் உடுடா துலுக்கா
- - உட மாட்டேன் மலுக்கா..."
- “இத்த மட்டும் பொன்னு தரேன் உடுடா துலுக்கா
கடைசியாக விட்டுவிடுவர்; ஆட்டம் முடிவுறும்.
மரங்கொத்திக் குருவியைக் கேட்பதுபோலவும் அது பதில் சொல்வது போலவும் சிறுவர்கள் நடித்துப் பிடிக்கும் விளையாட்டு ஆடும்போது பாடுவது:
- பையன் : “மரங்கொத்திக் குருவி!
- குருவி : ஆஅஅ -ஓஓஓ
- பை : வந்து பிடிச்சிக்கோ