பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்களும் வாழ்க்கை முறையும்

473



நாங்குத்தி யம்மா நல்லம்மா
நடந்து வாடி கண்ணம்மா.
அஞ்சிலே பிஞ்சி அவளுட நெஞ்சி
அஞ்சிலே பிஞ்சிலே என்ன வாழை
கும்ப கோணத்திலே குலை வாழை.

ஆறுநலாறு - தண்ணீர்ப் பந்தல் ஆறு.

ஏழையிலே கிடக்கிறேனே என்தோழி ஈசுவரி
மாயாப் பறக்கிறேன்.

கீழ்காணி மேல்காணி கீழே சுரக்காணி
கண்ணு ரெண்டும் கறப்பான்
கறந்த பால் குடிப்பான்.

அக்காடி அக்காடி - அக்கா ஆம்படையான் வந்தாண்டி
தெருவைப் பெருக்கடி - தென்னம் பாயைப் போடடி
(அல்லது)
ஊட்ட (வீட்டை பெருக்கடி உள்ளே பாயைப் போடடி
கிட்டவரப் பார்த்து - கட்டையாலே அடிடி.

தட்டு ஒண்ணு - தாம்பாலம் ரெண்டு
சோளப் பொரிமூணு - சொக்கட்டான் நாலி.

பொத பொத பொன்னும் பொத
வரவர வைக்கோல் தழை
சுடசுட சுக்குத் தண்ணீர்."


"அல்லுக்கு சில்லக்கு காமாட்சி விளக்கு
திருவாரூர் திருச்செங்க நாடு
நாடுநல்ல நாடு - நல்ல பாம்பு தலையாட்ட

ஈருகுத்தற மாதவா இலைபறிக்கிற தூதுவா
மணத்தக் கார யாதவா.

முக்கோட்டு சிக்கோட்டு பாகற்கா
முள்ளில்லா ஏலக்கா.

நாவே நாவே இந்திராணி
நாவல் மரத்திலே பட்டாணி.