பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்களும் வாழ்க்கை முறையும்

475



கையேந்தி கையேந்திக் கடலை சுடலேந்தி
ஏந்தி ஏந்தி நாதா என்பரப்பில் வாடா
பச்சைப் பிள்ளைக்கும் தாய்க்கும் பசுவேநாதா.

மார்தட்டு கீழ்தட்டு மாமி மறுதட்டு
சோளப் பொரித்தட்டு சோற்றை வடிகட்டு.

புதை புதை பொன்னம் புதை
வர வார வைக்கத் தாழை
சுடசுட சுக்குத் தண்ணி.

செல்லம் போட்டா காப்பித் தண்ணி
சர்க்கரை போட்டா டீத் தண்ணி.

கோங்காட கோங்காட கோகிலாம்பாள் தேரோட
பாம்பாட பாம்பாட பார்வதியம்மாள் தேரோட"

3


"பொறுக்கி சிறுக்கி போறாளாம் தண்ணிக்கு
தண்ணித் துறையிலே தகுந்த மனையிலே
பூமாதேவி யம்மா பிள்ளைவரம் கேட்கிறாள்.

அல்லல்ல அரசல்ல தித்திப்புப் பண்டம்
பாலாறு பழம்பழுக்கப் பலாச்சுளை.

இரட்டைக்குச் சிட்டை இராமனாத்தி முட்டை
கோழிக்குஞ்சு சப்பட்டை.

ஈரே இறுச்சிக்கோ பூவைப் பறிச்சிக்கோ
பெட்டிக்குள்ளே வச்சிக்கோ.

நான்கே நடந்துவா - பாம்பே படர்ந்துவா.
நாங்க ளாடும் பம்பரம் - சீதையாடும் சிதம்பரம்.

ஐவா குய்வா தட்டாத்தி
அழுக் கெடுப்பா வண்ணாத்தி
கூறும் கூறும் சித்தப்பா
கூழு குடிப்பார் பெரியப்பா.

ஏழைநீதி வாழை எங்கள் நீதி தோட்டம்
மணவாளத்து சர்க்கரை.