பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

476

கெடிலக்கரை நாகரிகம்



கீழ்காணி மேல்காணி கீழே அரைக்காணி
கண்ணிரண்டும் கறப்பாள் கறந்த பால்குடிப்பாள்
தேனிலும் பிறப்பாள் செல்வக் குமாரி.

ஈரோன் ரெண்டு
மாதாக் குண்டு மல்லிகைப்பூச் செண்டு.

பக்கா பக்கா லேலிலோ பறங்கிப் பக்கா லேலிலோ
குண்டு பக்கா லேலிலோ குடுகுடுத்தா லேலிலோ
வாங்கித் தின்னா லேலிலோ வட்டமிட்டா லேலிலோ.

மார்மார் ஒன்று - மத்தாப்பு இரண்டு
சோளப்பொரி மூன்று - சொக்கட்டான் நாலு
சோழி ஐந்து"


"சீ சிலுத்துக்கோ மாதுளங்கொழுந்து தண்ணியிலே
வெண்ணெய் சம்சாரப் பெண்ணை
சிலுக்கா கெண்டை மலுமலுக்கா கொண்டை
நாலகப்பை அரிக்கும் சட்டி
எடுக்கப் போனேன் தவறிப் போச்சு.

வெள்ளி முளைச்சிக் குச்சு விடிகாலம் ஆயிட்டுது
ஆலைக் குழாய் கூவிட்டுது அஸ்தகாலம் ஆயிட்டுது
இடியாப்பக் காரன் குடியைக் கெடுத்தான்.

ஈரி இறுச்சிக்கோ இலந்தம் பழுத்துக்கோ
ஏறி உலுக்கிக்கோ.

முக்கோட்டிலே பிள்ளை பெற்று - கப்பலிலே தாலாட்டி
நான்கே நான்கே நடந்துவா - பாம்பே பாம்பே படர்ந்துவா.

அஞ்சிலே பிஞ்சிலே என்ன வாழை
கும்பகோணத்திலே குலை வாழை.
பூ பொறுக்கி நாட்டிலே புடலங்காய் காய்ச்சுது
கா பொறுக்கி நாட்டிலே கடலைக்காய் காய்ச்சுது.

சிட்லா புட்லா காயே சீமை நெல்லிக் காயே
கடிச்சிப் பார்த்தா தெறிச்சிப் போகும்
கண்டங் கத்தரிக் காயே.